நாமக்கல் மாவட்டம்; நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி வாய்ந்த அந்த கோயிலில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், டிக்கெட் பஞ்சர், உதவி சுயம்பாகம் (பிரசாதம் தயாரிப்பு பணி) ஆகிய பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த பணியிடங்களை நிரப்ப, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்தாண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிக்கெட் பஞ்சர், உதவி சுயம்பாகம் போன்ற பணியிடங்களுக்கு தமிழில், எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இளநிலை உதவியாளர் பணிக்கு 18,500 ரூபாய் முதல் 58,600 ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் காலியாக உள்ள ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு மட்டும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பிஇ., பட்டதாரிகள் வரை மொத்தம் 3,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்காணல், ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.
ஒரே ஒரு பணியிடத்துக்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளதால், குறிப்பிட்ட இடைவெளியில் நேர்காணல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற நேர்காணலுக்கு 200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். காலை முதல் மாலை வரை இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
மேலும், இளநிலை உதவியாளர் பணிக்கு உள்ள ஒரே ஒரு பணியிடத்துக்கு, 3,500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அனைவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரம் பேருக்கு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கும் வரும் நாட்களில் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிக்கெட் பஞ்சர், உதவி சுயம்பாகம் போன்ற பணியிடங்களுக்கு தமிழில், எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இளநிலை உதவியாளர் பணிக்கு 18,500 ரூபாய் முதல் 58,600 ரூபாய் வரை சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலியாக உள்ள ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு மட்டும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பிஇ., பட்டதாரிகள் வரை மொத்தம் 3,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்காணல், ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.
ஒரே ஒரு பணியிடத்துக்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளதால், குறிப்பிட்ட இடைவெளியில் நேர்காணல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற நேர்காணலுக்கு 200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். காலை முதல் மாலை வரை இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
மேலும், இளநிலை உதவியாளர் பணிக்கு உள்ள ஒரே ஒரு பணியிடத்துக்கு, 3,500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அனைவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரம் பேருக்கு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கும் வரும் நாட்களில் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.