ஆப்நகரம்

கரூரில் ரூ.11 கோடி பறிமுதல்; அரசியல் கட்சிகள் அதிருப்தி

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

TOI Contributor 24 Apr 2016, 4:26 pm
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil ec officials seized rs 11 crore in karur
கரூரில் ரூ.11 கோடி பறிமுதல்; அரசியல் கட்சிகள் அதிருப்தி


நாட்டிலேயே அதிகளவு பணம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கரூர் மாவட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும், தீவிர சோதனை நடத்திவருகின்றனர். கரூர் மாவட்டம் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும், கரூரின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, இன்றும் பல இடங்களில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இதன் முழு விவரங்கள் இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

இதனால், திமுக, தேமுதிக, காங்கிரஸ், தமாகா, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள், அதிருப்தி அடைந்துள்ளன. தேர்தல் ஆணையம், ஆளும் அதிமுக அரசுக்கு சாதமாக செயல்படுவதாகவும், இது கண்டிக்கத்தக்க செயல் எனவும் இந்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அடுத்த செய்தி