ஆப்நகரம்

நாகப்பட்டினம் ஐடிஐ மையங்களில் மாணவர் சேர்க்கை!

நாகப்பட்டினத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 10 Sep 2019, 11:56 am
Samayam Tamil nagapattinam iti
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இத தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மாணவ, மாணவிகள் பயிற்சியில் சேர நேரடிச் சேர்க்கை 16.09.2019 வரை நடைபெறவுள்ளது.

(அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை!)

எனவே மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிhpவுகளில் காலியாக உள்ள இடங்களில் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் நேரடி சேர்க்கை வாயிலாக பயிற்சியில் சேர;ந்து பயன்பெறலாம்’ இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி