கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1 ஆம் வகுப்பில் சேரும் ஏழை குழந்தைகள், கட்டணமின்றி 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கலாம். இதற்காக தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்படும். மே மாத இறுதியில் முடிவடையும்.
இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 25% இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 2020-21 கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்ததாக எப்போது தொடரும் என்ற மாற்று தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு அரசுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 25% இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 2020-21 கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்ததாக எப்போது தொடரும் என்ற மாற்று தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு அரசுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.