ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மறுத்தேதி அறிவிப்பு!

மழை புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், டிப்ளமோ தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தற்போது அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 12 Dec 2022, 7:58 pm
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், மாண்டோஸ் புயல் காரணமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள், கல்லூரி தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் ஆகியவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
Samayam Tamil anna university exams


குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 9.12.22 (வெள்ளிக்கிழமை) மற்றும் 10.12.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

9.12.2022 நடக்கவிருந்த தேர்வுகள் வருகின்ற 24.12.2022 சனிக்கிழமை அன்று காலை மற்றும் மதியம் நடைபெறவுள்ளது. அதே போல், 10.12.2022 அன்று நடக்கவிருந்த தேர்வுகள் 31.12.2022 சனிக்கிழமை அன்று காலை மற்றும் மதியம் நடைப்பெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட யுஜி மற்றும் பிஜி தேர்வுகளும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி