ஆப்நகரம்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் தள்ளி வைப்பு!

Anna University: தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Apr 2020, 5:01 pm
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Anna University


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகள், அடுத்த பருவம் தொடங்கியதும் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார். மேலும், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அரசின் உத்தரவை ஏற்று, இன்ஜினியரிங் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஏப்.17) அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,

‘பல்கலைக்கழக துறைகள் (கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம், அழகப்பா தொழில்நுட்பக்கழகம்), அரசு உதவிப்பெறும் கல்லூிகள், தன்னாட்சி கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து இளநிலை, முதுநிலை படிப்பிற்கான தேர்வுகள், பாடங்கள், அசைன்மென்ட் டெஸ்ட், திட்ட ஆய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

மேற்கண்ட கல்லூரிகள் திறக்கப்படும் தேதி விவரங்கள், வகுப்புகள், தேர்வு கால அட்டவணை, புராஜக்ட் ரிவ்யூ போன்ற அனைத்தும் பின்னர் அறிவிக்கப்படும்’. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி