ஆப்நகரம்

10ஆம் வகுப்பில் தோல்வியா? மற்றொரு வாய்ப்புக்கு மே 10 வரை விண்ணப்பிக்கலாம்

சிறப்பு துணைப்பொதுத் தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும். இதற்கு தேர்வுக்கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 May 2019, 2:58 pm
2018-19ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் தனித்தேர்வர்களும் மே 10ஆம் தேதிக்குள் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil Photosoftheweek9


இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 2019 சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே 6ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

சிறப்பு துணைப்பொதுத் தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும். இதற்கு தேர்வுக்கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை:

அடுத்த செய்தி