ஆப்நகரம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.. 30 லட்சம் மாணாக்கர்கள் எழுதுகின்றனர்

CBSE Board Exam 2020: 10, 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Samayam Tamil 15 Feb 2020, 9:03 am
Central Board of Secondary Examination (CBSE): நாடு முழுவதும் நாளை 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (பிப்.15) தொடங்கியுள்ளது. மார்ச் 20 ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. சுமார் 28 லட்சம் மாணாக்கர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் பொதுத்தேர்வு நடைபெறும். முதல் 15 நிமிடங்கள் கேள்வித்தாளை வாசிப்பதற்கு நேரம் வழங்கப்படுகிறது.
Samayam Tamil CBSE Board Exam 2020


CBSE Board Exam 2020 தொடர்பான முக்கிய கட்டுபாடுகள்:

  • தேர்வு நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது, காலை 9,40 மணிக்கெல்லாம் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும்.
  • தேர்வுக்கு வரும் போது ஹால்டிக்கெட் தவறாமல் எடுத்து வர வேண்டும்.
  • பள்ளி சீருடையில் மட்டுமே மாணவர்கள் வரவேண்டும். தனித்தேர்வுகள் அவர்களுக்குரிய உடையில் வரலாம். கயிறு, பேண்ட் போன்றவை அணிந்து வரக்கூடாது.
  • டிஜிட்டல் வாட்ச், ஆபரணங்கள் ஆகியவை அணியவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஹால் டிக்கெட், பென்சல் பவுச், ஜியோமெட்ரி பாக்ஸ், கார்டு போர்டு மட்டுமே எடுத்து வர அனுமதி
  • காலை 10 மணிக்கு சரியாக OMR விடைத்தாள் வழங்கப்படும். அதில் தேர்வு எண், தேர்வு மைய விவரங்களை பூர்தி செய்ய வேண்டும்.
  • காலை 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாளை நன்றாக படித்து பார்ப்பதற்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
  • காலை 10.30 மணிக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பாடங்களுக்கு ஏற்ப3 அல்லது 2 மணி நேரம் வரையில் தேர்வு நடைபெறும்.
  • தேர்வு சம்பந்தமாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தங்களுடைய ஆசிரியரை அணுகி கேட்கலாம்.

அடுத்த செய்தி