ஆப்நகரம்

பாரதிதாசன் பல்கலை., 20 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்காததாகப் புகார்

இன்று தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவதற்கு நுழைவுச்சீட்டு வரவில்லை எனக் கூறி, தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

Samayam Tamil 27 May 2019, 11:08 pm
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 20 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Samayam Tamil 25TYUNIVERSITY


புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 20 மாணவ மாணவிகளுக்கு பணம் கட்டியும் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. பல்கலைகழக அதிகாரிகளிடம் மாணவ மாணவிகள் கேட்டபோது தேர்வு எழுதும் மையமான புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.

அதை நம்பி இன்று தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவதற்கு நுழைவுச்சீட்டு வரவில்லை எனக் கூறி, தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அந்த மாணவ மாணவிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். உடனடியாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேசி தேர்வு எழுத அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி