ஆப்நகரம்

SSLC பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Apr 2020, 7:15 pm
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியமானது. மாணவர்களின் எதிர்காலத்திற்கும், மேற்படிப்புக்கும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் தேவை என்ற நிலை உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
Samayam Tamil Minister K. A. Sengottaiyan


Also Read This:

மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உள்ளது. ஊரடங்கு தடை நீக்கப்பட்ட பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகே, தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மூன்று மணி நேரம் நடைபெறும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், தேர்வின் போது மாணவர்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்கும். சகஜ நிலை திரும்பியதும் மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

இதற்கிடையில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் வினாத்தாள் திருத்தும் பணி தொடங்கும். ஏற்கனவே, ஒரு தேர்வில் பல மாணவர்கள் எழுதாமல் உள்ளனர். அந்த விட்டுப்போன தேர்வும் நடத்தப்படும்.

சில தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை வற்புறுத்தி பெறுவதாக குற்றச்சாட்டு வருகின்றனர். அவ்வாறு கட்டண வசூல் செய்வது அரசின் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி