ஆப்நகரம்

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள்!

TN Board Exam: Tamil Nadu Public Exam: இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

Samayam Tamil 16 Dec 2019, 12:32 pm
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை விபரங்களைப் பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுத் துறை இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Samayam Tamil TN Disabled Abled 2019


அதன்படி, நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களுக்கான தேர்வு எழுதுபவரை நியமிக்கலாம். தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது.

TNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை வெளியீடு!

காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், இரண்டு மொழிப்பாடங்களில், ஏதேனும் ஒன்றை மற்றும் தேர்ந்தெடுத்து எழுதலாம். மற்றொரு மொழிப்பாடம் எழுத தேவையில்லை.

நரம்பியல் கோளாறு, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வின் போது கால்குலேட்டர், கிளார்க் அட்டவணை பயன்படுத்தலாம். வினாத்தாளை படித்துக் காட்டுவதற்கு, அல்லது மாற்றுத்திறனாளி சொல்வதை அப்படியே எழுதுவதற்கு ஆசிரியரை நியமிக்கலாம்.

அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செருப்புக்கு பதிலாக ‘ஷூ’ வழங்க ஒப்புதல்!

10 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் செய்முறை தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அனுமதி கேட்கலாம். அவ்வாறு செய்முறை தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள், தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அரசு தேர்வு துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்த செய்தி