ஆப்நகரம்

அரையாண்டுத் தேர்வு முடிந்தது! நாளை முதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!!

TN Schools Holidays: தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் (Half Yearly Examination) முடிந்த நிலையில், நாளை முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Dec 2019, 12:43 pm
தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (டிச.23) முடிவடைந்த நிலையில், நாளை முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Half Yearly Leave 2019


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கியது. 11,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி, கடந்த 20 ஆம் தேதி முடிந்தது. இதே போல், 10 ஆம் வகுப்பு மற்றும் இதர வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 13 தொடங்கியது.

இந்நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (டிச. 23) முடிந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறைக்குப் பின்னர், ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு அடுத்தடுத்து வருவதால், பள்ளிகளும் இயங்காது.

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும், அன்றைய தினமே மூன்றாம் பருவத்துக்கான புத்தங்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடும் வகையில், பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் தட்கல் டிக்கெட்டுக்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் முடிந்து விட்டன. இதே போல், தென் மாவட்ட பேருந்துகளிலும் முன்பதிவுகள் அனைத்தும் நிரம்பி விட்டது.

அடுத்த செய்தி