ஆப்நகரம்

டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் ஒத்திவைப்பு!

TNPSC Departmental Exam 2019: Tamil Nadu Public Service Commission எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இம்மாதம் நடைபெற இருந்த துறை தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2019, 11:00 am
உள்ளாட்சி தேர்தலை நடைபெற உள்ளதால், டிசம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரை இருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil TNPSC Departmental Exams


தமிழக அரசில் பணியில் உள்ளவர்களுக்கான துறை தேர்வுகள் இந்த டிசம்பர் மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அரசு வேலை இல்லாதோர் இந்த தேர்வை எழுத முடியாது. அதாவது அரசுப் பணியாளர்கள், தங்கள் துறையில் பதவி உயர்வு பெற வேண்டும் என்பவர்கள் இந்த தேர்வை எழுதலாம். உதாரணமாக, வருவாய்த்துறையில் ஒருவர் பணியாற்றி வருகிறார் என்றால், டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வு எழுதி, வருவாய்துறையில் பதவி உயர்வு பெற முடியும். இதற்காக துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும்.

அதன்படி, டிசம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரையில் டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் நடக்கும். கிறிஸ்துமஸ் நாள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உட்பட) துறை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது டிசம்பர் 27 முதல் 30 ஆம் தேதி வரையில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, இம்மாதம் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் ஜனவரி 5 முதல் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள், தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரையில் ஹால் டிக்கெட்டை பெற முடியும்.

அடுத்த செய்தி