ஆப்நகரம்

நாளை மறுநாள் TNPSC துறை தேர்வுகள்!

TNPSC Departmental Exam 2020: Tamil Nadu Public Service Commission: டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் நாளை மறுநாள் (ஜனவரி 5) நடைபெறுகிறது.

Samayam Tamil 3 Jan 2020, 5:50 pm
தமிழக அரசில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
Samayam Tamil TNPSC Departmental Exam 2020


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு, பதவி உயர்வு பெறுவதற்கான துறை ரீதியலான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. துறை தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், ஏற்கனவே பணியில் உள்ள அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பதவி உயர்வு பெற முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் சமூகநலத்துறையில் பணியாற்றுகிறார் என்றால், டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வு எழுதி, அதே துறையில் அதிகாரியாகலாம்.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுக்கான அறிவிப்பானை கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. ஆன்லைன் விண்ணப்பப்பதிவு அக்டோபர் 1 முதல் 30 வரையில் நடைபெற்றது. துறை தேர்வுகள் டிசம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான காரணத்தினால், டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது வரும் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் துறை தேர்வுகள் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு கால அட்டவணையைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
TNPSC Departmental Exam 2020 Time Table
இந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அதற்கு ஏற்ப துறை ரீதியலான கேள்விகள் கேட்கப்படும். அரசு பணியில் இல்லாதவர்கள் துறை தேர்வினை எழுத முடியாது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறாத விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

அடுத்த செய்தி