ஆப்நகரம்

TNPSC Group-VI EXAMS : வன தொழில் பழகுநர் தேர்வுக்கான தேர்வு மையங்களில் மாற்றம்!

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த வன தொழில் பழகுநர் பணிக்கான தேர்வு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் தேர்வு மையங்களில் மாற்றமுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு பணியாளர் தேர்வாணையம்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 16 Nov 2022, 2:00 pm
தமிழ்நாடு முழுவதும் 15 இடங்களில் வன தொழில் பழகுனருக்கான தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்போது 7 மையங்களில் மட்டுமே வனத்தொழில் பழகுநர் தேர்வு நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil tnpsc forest apprentice exam


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுருந்தது.அதற்கான, தேர்வு மையங்களாக முதல் கட்டமாக தேர்வாணையம் மூலம் 15 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால்,தேர்வு செய்யப்பட்ட 15 மையங்களின் எண்ணிக்கையானது தற்போது ஏழு மையங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கட்டாய தேர்வான தமிழ் மொழி தேர்வு 4/12/2022 அன்று மதியம் ஓ.எம்.ஆர் ஷீட் முறையில் நடைபெறும். பிற பாடங்கள் கணினி வழி தேர்வாக 5/12/2022 துவங்கி 11/12/2022 வரை நடைபெற உள்ளது..
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி