ஆப்நகரம்

TNPSC GROUP 3 தேர்வு மையங்களில் மாற்றம்! 38 மையங்கள் 15ஆக குறைப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஜனவரி நடக்கவிருந்த குரூப் 3 தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை மாற்றி அமைத்துள்ளது. பல்வேறு மாவட்ட மையங்களை நீக்கி விட்டு அருகாமை மாவட்டங்களை இணைத்து தேர்வு மையங்களை ஏற்பாடு செய்துள்ளது. புதிய தேர்வு மையங்களின் விவரங்களை உள்ளே தெரிந்து கொள்ளுங்கள்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 6 Dec 2022, 1:04 pm
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு III (தொகுதி III - A) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு 2023 ஜனவரி மாதம் 28ஆம் தேதி முற்பகல் 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது.
Samayam Tamil tnpsc exam group 3 2023


இந்நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் 15 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டும் ஜனவரி 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை ,கடலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், கோயம்புத்தூர் ,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,சேலம், சிவகங்கை,தஞ்சாவூர் ,உதகமண்டலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 15 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை மையங்களுக்கு சேர்த்து சென்னையிலும், மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மையங்களுக்கு சேர்த்து மதுரை தேர்வு மையத்திலும் தேர்வு நடைபெறும்.

அதே போல், கடலூர், விழுப்புரம் ஆகியவை கடலூர் மையத்திலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மையங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலும், கோயம்பத்தூர், திருப்பூர் மையங்களுக்கு கோவையிலும் தேர்வு நடைபெறும்.

சேலம், தருமபுரி,ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சேலம் மையத்திலும், தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.

திருச்சி, பெரம்பலூர்,கரூர் மையங்களுக்கு திருச்சியிலும், திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி மையங்களுக்கு திருநெல்வேலியிலும், வேலூர், கிருஷ்ணகிரி,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு வேலூர் மையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.

மேலும், நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, உதகமண்டலம் ஆகிய மாவட்டங்களுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி