ஆப்நகரம்

ஜே.இ.இ. மெயின் 2 தேர்வு எழுத 3.15 லட்சம் புதிய விண்ணப்பங்கள்!

கடந்த ஜனவரி மாதம் நடத்த ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) தேர்வு முடிவுகள் ஒரே வாரத்தில் வெளியிடப்பட்டன. ஏப்ரலில் நடக்கும் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வு முடிவும் அவ்வாறு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Samayam Tamil 10 Mar 2019, 3:49 am
ஜே.இ.இ. மெயின் 2 தேர்வை எழுத ஜே.இ.இ. மெயின் 1 தேர்வை எழுதியவர்களில் 75% பேர் உட்பட 6.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil 556424-551833-neet-exam-022617


ஐஐடி, என்.ஐ.டி போன்ற பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடத்தப்படும் பொத நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. (JEE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination). இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி நடத்துகிறது.

ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) மற்றும் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) என இத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். இந்த இரு தேர்வுகளை எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த ஆண்டு ஜனவரில் நடந்த ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) தேர்வை 6.69 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 75% பேர் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வையும் எழுத விண்ணப்பித்துள்ளனர்.

ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வு வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலோ மூன்றாவது வாரத்திலோ நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் இத்தேர்வுக்கு 9.34 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதிதாக 3.14 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் நடத்த ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) தேர்வு முடிவுகள் ஒரே வாரத்தில் வெளியிடப்பட்டன. ஏப்ரலில் நடக்கும் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வு முடிவும் அவ்வாறு வெளியாக வாய்ப்பு உள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்