ஆப்நகரம்

CUET UG : கியூட் இளங்கலை 2023 தேர்வுக்கான விண்ணப்ப காலம் நாளையோடு முடிவு!

CUET UG 2023 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் கியூட் இளங்கலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டித்திருந்தது யுஜிசி. அந்த கால அவகாசமும் நாளையோடு முடிவடைகிறது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 10 Apr 2023, 10:00 am
இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக NTA மூலம் CUET-UG(common university entrance test) நடத்தப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான கியூட் இளங்கலை தேர்வுக்கான விண்ணப்ப தேதி கடந்த பிப்ரவரி 9ம் தேதி துவங்கப்பட்டு மார்ச் 12ம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு காரணங்களுக்காக இந்த கால அவகாசம் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil CUET UG 2023


மூன்றாம் முறை அவகாசம் நீட்டிப்பு..

ஏற்கனவே இரண்டாம் முறை கால அவகாசமும் முடிவடைந்த நிலையில் பல்வேறு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் மூன்றாம் முறையாக தேசிய தேர்வு முகமை விண்ணப்ப தேதியை ஏப்ரல் 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நாளை(11.4.2023) இரவு 11:59 மணியோடு இந்த அவகாசம் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பத்தை சமர்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் வழியாக கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி CUET UG 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

CUET UG 2023 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : CUET UG இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : முகப்பு பக்கத்தில் இருக்கும் Register என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
STEP 3 : புதிய டேபில் அறிவிப்பு இருக்கும். அவற்றை முழுமையாக படித்து விட்டு Proceed என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
STEP 4 : புதிய பயனராக இருந்தால் New Registration என்பதை கிளிக் செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
STEP 5 : தற்போது உங்களுக்கு புதிய லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் உருவாகி விடும்.
STEP 6 : அதை பயன்படுத்தி லாகின் செய்து CUET-UG 2023 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளவும்.
STEP 7 : விண்ணப்பத்தில் கேட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
STEP 8 : விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்தவுடன் விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தி விட்டு சப்மிட் கொடுக்கவும்.
STEP 9 : விண்ணப்பத்தின் இறுதி வடிவத்தை எதிர்கால தேவைகளுக்காக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி