ஆப்நகரம்

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம்!

Joint Entrance Examination எனப்படும் JEE Main April 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், கடைசி தேதி எப்போது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 6 Mar 2020, 5:22 pm
JEE Main 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி இன்றோடு முடியும் நிலையில், தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil JEE Main 2020 April


பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேற்கொண்டு, ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியில் படிப்பில் சேர வேண்டுமென்றால் JEE நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். 2020-21 கல்வியாண்டிற்கான JEE மெயின் தேர்வு, வரும் ஏப்ரல் 5 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.

JEE Main April 2020 தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 6 ஆம் தேதியோடு விண்ணப்பப்பதிவு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், JEE Main April 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி