ஆப்நகரம்

CBSE 10 & 12th Results : சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாதா? அப்ப உண்மையான தேதி எப்போது?

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இன்று நாளை என இழுத்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் மே 11 அன்று முடிவுகள் வெளியாகும் என்று பரவிய தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 11 May 2023, 11:03 am
மத்திய பாடத்திட்டத்தில் நடைபெறும் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022 - 2023 கல்வியாண்டிற்கான பொது தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
Samayam Tamil CBSE Results 2023


CBSE பெயரில் போலி அறிவிப்பு..
இந்நிலையில் சமீபத்தில் மே 11 அன்று CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்ட அறிவிப்பு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. பலரும் அதை நம்பி நாளை தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் அது ஒரு போலியான அறிவிப்பு என்றும், அதற்கும் CBSE நிர்வாகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் CBSE நிர்வாகம் அறிவித்துள்ளது.

CBSE 10&12 தேர்வு முடிவுகள்..
இதுகுறித்து CBSE நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த போலி அறிவிப்பை பகிர்ந்து FAKE என்று பதிவிட்டுள்ளது. இதுவரை, CBSE பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு CBSE நிர்வாகத்திடம் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள்..
அதே சமயம், தமிழகத்தில் சமீபத்தில்தான் மாநிலப்படத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வருகின்ற மே 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மாறி மாறி வரும் தகவல்களால் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் தற்போது குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி