ஆப்நகரம்

TNPSC Results : தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் ஆகிய பணிகளுக்காக நவம்பர் மாதம் நடத்திய எழுத்து தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் TNPSC இணையதளம் சென்று உங்கள் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 15 Feb 2023, 8:49 pm
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 12 மற்றும் 13, 2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவக் கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு குடிசை சமூக பகுதி மாற்று வாரிய மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) ஆகிய பணிகளுக்கான தேர்வை நடத்தியது.
Samayam Tamil TNPSC results


மொத்தம் உள்ள 16 பணியிடங்களுக்கான தேர்வில் 350 தேர்வர்கள் இரு தினங்களில் கலந்து கொண்டனர். இதில் 310 தேர்வர்களின் எழுத்து தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு பதிவு எண்ணை பயன்படுத்தி அவரவர் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

டிஎன்பிஎஸ்சி தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் தேர்வு முடிவுகள்!
STEP 1 : டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : முகப்பு பக்கத்தில் உள்ள NOTIFICATION பகுதியில் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் தேர்வு முடிவுக்கான லின்க் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
STEP 3 : தற்போது திறக்கும்புதிய டேபில் உங்கள் VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATION DEPARTMENT & COMMUNITY OFFICER IN TAMIL NADU URBAN HABITAT DEVELOPMENT BOARD IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE & TAMIL NADU SLUM CLEARANCE BOARD COMMUNITY DEVELOPMENT SERVICE என்ற அறிவிப்பிற்கு நேராக இருக்க கூடிய லின்கில் கிளிக் செய்யவும்.
STEP 4 : இப்போது புதிய பக்கம்திறக்கும். அதில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு உங்கள் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளவும்.
STEP 5 : பிறகு உங்கள் தேர்வு முடிவுகளை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

TNPSC அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி