ஆப்நகரம்

NTSE Results 2018: தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

Samayam Tamil 10 Apr 2019, 10:57 am
தமிழகத்தில் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
Samayam Tamil cbse certificate


பள்ளி படிப்பு முடிக்கும் மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. அவற்றில், தேசிய திறனாய்வு தேர்வும் உண்டு. ஒவ்வொறு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி படிப்பு நிறைவு பெறும் வரையில், அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்ப்ட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த 2018 நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது வெளியிட்ப்பட்டுள்ளது. மாணவர்கள் dge.tn.gov.in என்ற பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி