ஆப்நகரம்

பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு!

TN Public Exam Result 2020: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள், கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 Apr 2020, 11:31 am
நடந்து முடிந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் பணிகள், கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Directorate of Government Examinationt


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. பிளஸ் 1 இல் ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பாடத்துக்கான பொதுத்தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துவிட்டது. தேர்வு முடிந்த பின்பு, விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது.

ஆனால், அதற்குள்ளாக கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Also Read This:

இதனிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த விடைத்தாள் திருத்தும் பணிகள், மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்தாக இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றிய தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி