ஆப்நகரம்

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! அவினாசி கல்லூரி மாணவி முதல் இடம்!!

TNPSC Group 2 Result 2019: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அவினாசியைச் சேர்ந்த சுபாஷினி மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

Samayam Tamil 3 Dec 2019, 1:43 pm
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுபஷினி கல்லூரி மாணவி முதல் இடம் பிடித்துள்ளார்.
Samayam Tamil TNPSC Group 2 Result 2019


தமிழகத்தில் குரூப் 2 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் 1,338 பணியிடங்களுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 14,797 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரக பணிக்கான TNPSC தேர்வு அறிவிப்பு!

இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய தேர்வில், திருப்பூர் அவினாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளார். இவர் பொருளாதார பாடப்பிரிவில் முதநிலைப் பட்டம் படித்து வருகிறார். குரூப் 2 தேர்வில் முதல் இடம் பிடித்த சுபாஷினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொல்லியில் துறையில் வேலை.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிப்பு

அடுத்த செய்தி