ஆப்நகரம்

TNPSC GROUP 4 2022 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

இந்தாண்டு நடைப்பெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அடுத்தாண்டு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மூன்று முறைக்கும் மேலாக தள்ளி போன தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 29 Dec 2022, 10:35 pm
கடந்த ஜீலை மாதம் 7301 பணியிடங்களுக்காக 18இலட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதிய குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இந்தாண்டு அக்டோபர் மாதமே வெளியாகியிருக்க வேண்டும்.
Samayam Tamil tnpsc group 4 2022 results


மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான உச்சநீதிமன்ற வழக்கில் கொடுக்கப்பட்ட உத்தரவின்படி, முடிவுகளில் திருத்தம் செய்ததால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்கு பிறகு டிசம்பர் மாதமும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் பலமுறை தள்ளி சென்றதால் தேர்வர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் பல மாதங்கள் காத்திருப்பிற்கு பிறகு தற்போது 2022 ஜீலை மாதம் நடத்தப்பட்ட குரூப்4 தேர்வுகளுக்கான முடிவுகளை 2023 பிப்ரவரி மாதம் வெளியிடுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த முறைகள் போலவே இந்த முறையும் தேர்வு முடிவுகள் வெளியாவது தள்ளி போய் விடுமோ என்ற அச்சத்தில் தேர்வர்கள் உறைந்து போயுள்ளனர். இந்த முடிவுகளை பொறுத்தே அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தயாராக வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளதால் இந்த தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி