ஆப்நகரம்

”நானே எதிர்பார்க்கவில்லை”: சிபிஎஸ்சி +2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி..!

சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை என நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்‌ஷா கோபால் தெரிவித்துள்ளார்.

TNN 28 May 2017, 12:33 pm
சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை என நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்‌ஷா கோபால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil  i still cant believe the result says cbseclassxii topper raksha gopal
”நானே எதிர்பார்க்கவில்லை”: சிபிஎஸ்சி +2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி..!


சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. அதில் நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 10.20 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்த தேர்வில் நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளி மாணவியான ரக்‌ஷா கோபால் 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேர்வில் முதலிடம் பிடித்ததை இப்போது வரை தன்னால் நம்ப முடியவில்லை என ரக்‌ஷா தெரிவித்துள்ளார்.

“பிளஸ் டூ தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் என்பதைத்தான் குறிக்கோளாக கொண்டிருந்தேன். ஆனால் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பேன் என நினைக்கவே இல்லை. இப்போதும் நான் முதலிடம் பிடித்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை.” என ரக்‌ஷா கோபால் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 82 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 83.05 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

I still can't believe the result, , says #CBSEclassXII topper Raksha Gopal

அடுத்த செய்தி