ஆப்நகரம்

12 வகுப்பு பொதுத் தேர்வு : செல்போனுக்கு தடை

12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு வளாகத்திற்குள் செல்போன் எடுத்துவரக்கூடாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

TNN 28 Feb 2017, 7:09 pm
சென்னை : 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு வளாகத்திற்குள் செல்போன் எடுத்துவரக்கூடாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
Samayam Tamil 12th public exam cellphone ban
12 வகுப்பு பொதுத் தேர்வு : செல்போனுக்கு தடை


தமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோல், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்தநிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, "மார்ச் 2இல் தொடங்கும் பொதுத்தேர்வில் சென்னையில் இருந்து 53,572 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் சிரிய முறையில் செய்யப்பட்டுள்ளனர்

தேர்வு மைய வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் செல்போன் கொண்டு வந்து அதனை கண்காணிப்பாளரிடம் கொடுக்கவும் அனுமதி கிடையாது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத வரும் போது கட்டாயம் தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டுவரக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
12th public exam : cellphone ban

அடுத்த செய்தி