ஆப்நகரம்

300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை.!

இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது.

TNN 2 Dec 2017, 12:33 pm
இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil 300 engineering colleges are banned in all over india at next year
300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை.!


இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுதும் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 13.56 லட்சம் மாணவர்கள் பயில முடியும். இக்கல்லூரிகளை ஆய்வு செய்த போது, 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 வருடங்களாக 30 சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்ந்ததால், அடுத்த கல்வியாண்டில் இருந்து மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், பொறியியல் கல்லூரியாக செயல்பட தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இது தொடர்பாக ஏஐசிடிஇ சேர்மன் பேராசிரியர் அனில் டி சகாஸ்ரபுதே கூறுகையில், கல்லூரிகள் மூடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், கல்லூரிகளை மூடுவது எளிது என்றாலும், அதனால் சில பிரச்னைகள் ஏற்படும் என்று கூறினார். நிறுவனர்கள் செய்த முதலீடு, வங்கி கடன்,கல்லூரிகளை முழுமையாக ஆய்வு செய்த பின் மூடுவதற்கு பதில் மாற்று வழிகளை ஆய்வு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று பேராசிரியர் அனில் டி சகாஸ்ரபுதே தெரிவித்தார்.

அடுத்த செய்தி