ஆப்நகரம்

ஆதி திராவிடர் பள்ளிகளில் இன்னும் நிரப்பப்படாத 475 ஆசிரியர் பணியிடங்கள்!

ஆதி திராவிடர் பள்ளிகளில் 475 ஆசிரியர் இடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுள்ளது.

Samayam Tamil 2 Jan 2019, 1:15 pm
ஆதி திராவிடர் பள்ளிகளில் 475 ஆசிரியர் இடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுள்ளது .
Samayam Tamil images (4)


ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில்475 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வாணையம்குறைந்தஆசிரியர்களை பணிக்கு எடுப்பதால் இந்த நிலை ஏற்படுள்ளதாககூறப்படுகிறது.

இதுகுறித்து ஆதி திராவிடர் நலத்துறையினர்கூறியதாவது ‘கடந்த 3 வருடங்களாக ஆதி திராவிடர் நலப்பள்ளிகளுக்குபுதிய ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் புதிய ஆசியர்கள் நியமிப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வாணையத்திடம் தொடர்பு கொண்டோம்.ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை’ என்று கூறியுள்ளனர்

ஆசியர்கள் பற்றாக்குறையால்குழந்தைகளின் கல்வி அதிகளவில் பாதிகப்படுள்ளது. மேலும் பாடங்களை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகூறுகையில் ’ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு ஆசியர்கள் நியமனம் செய்வதில் காட்டப்படும் அலசியத்தை நவீனத்தீண்டாமையாக பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு தீர்வு காண்பதற்காக தற்காலிக ஆசியர்களை பணியில் அமர்த்த ஆதி திராவிடர் நலத்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்புகடந்த டிசம்பர் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது .

அடுத்த செய்தி