ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,687 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில்,1,687 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 May 2018, 9:55 am
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 1,687 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil School 1_0 (1)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,456 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ, மாணவிகள் எழுதினர். இதுதவிர தனித் தேர்வர்களாக 34, 649 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 96.4% மாணவிகளும், 92.5% சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை (98.50%), ஈரோடு (98.38%), விருதுநகர் (98.26%) மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 5,584 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தேர்வெழுதிய 5,456 அரசுப்பள்ளிகளில் 1,687 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான அளவு கல்வித்தரம் இல்லை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறமையற்றவர்களாக இருப்பார்கள் என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், 5,456 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி