ஆப்நகரம்

குஜராத் பொதுத்தேர்வு: 959 மாணவர்கள் ஒரே பதில்கள்! ஒரே தவறுகள்!

முறைகேடு நடந்த ஒரு தேர்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு கட்டுரையை வார்த்தை மாறாமல் அப்படியே எழுதியுள்ளனர். கணக்கு, பொருளாதாரம், ஆங்கிலம் என பல தேர்வுகளில் காப்பி அடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Samayam Tamil 20 Jul 2019, 10:24 am
குஜராத் மாநில 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 1000 மாணவர்கள் ஒரே மாதிரியான தவறுகள்ளுடன் ஒரே மாதிரி விடைகளை எழுதியுள்ளது. தெரியவந்துள்ளது.
Samayam Tamil gf


2019ஆம் ஆண்டு குஜராத் மாநில 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் காப்பி அடித்திருக்கலாம் என புகார் எழுந்தது. குஜராத் மாநில இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. காப்பி அடித்திருப்பது பற்றி புகார் வந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் ஆராயப்பட்டன.

அப்போது 959 மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் ஒரே மாதிரியான பதிலையே அளித்திருப்பது தெரிந்தது. ஒருவர் செய்த தவறையை மற்றொருவரும் செய்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மெகா முறைகேடு நிகழ்ந்துள்ளது என்பது உறுதியானது.

முறைகேடு நடந்த ஒரு தேர்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு கட்டுரையை வார்த்தை மாறாமல் அப்படியே எழுதியுள்ளனர். கணக்கு, பொருளாதாரம், ஆங்கிலம் என பல தேர்வுகளில் காப்பி அடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பி அடிப்பது கண்டுபிடிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காப்பி அடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை 2020ஆம் ஆண்டு வரை நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜுனாகத், கிர் சோம்னாத் ஆகிய மாவட்டங்களைச் சேரந்த தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்கள் அதிக அளவில் சிக்கியுள்ளனர். தேர்வு மைய கண்காணிப்பில் இருந்த ஆசிரியர்களே மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக்கொடுத்தனர் என சில மாணவர்கள் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

சுரேந்திரநகர், அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய இடங்களில் உள்ள சில சுயநிதிப் பள்ளிகளில் சில மாணவர்கள் ரூ.35,000 ஆண்டுக் கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். ஓரிரு வாரங்கள் மட்டுமே பள்ளிக்கு வந்த அவர்களும் மற்ற மாணவர்களைப் போல இந்தத் தேர்வை எழுதியுள்ளனர் என தகவல்கள் கூறுகிறன்றன.

அடுத்த செய்தி