ஆப்நகரம்

தனது மாணவரின் சிகிச்சைக்கு 10 லட்சம் கொடுத்து உதவிய அரசு பள்ளி ஆசிரியர்...!

ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்களுக்கு என்ன தேவை என்போதை கண்டறிந்து செய்வதில் சிறந்தவர்கள். நாம் கேள்விப்பட்டிருப்போம், தனது மாணவருக்கு ஒரு ஆசிரியர் ஷூ வாங்கி கொடுத்தார்.... சீருடை வாங்கி கொடுத்தார்.... மடிக்கணினி வாங்கிக்கொடுத்தார் என.... ஆனால், தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் தனது மாணவரின் மருத்துவ செலவுக்காக பணம் வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

Samayam Tamil 27 Jul 2022, 11:41 am
நாம் அனைவருக்கும் பள்ளிப்பருவம் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், நமக்கு கிடைத்த முதல் நண்பன், நமக்கு பிடித்த வகுப்பு, நமக்கு பிடித்த பாடம், நமக்கு பிடித்த ஆசிரியர் என வாழ்க்கையில் நமக்கு பிடித்த நிகழ்வுகள் நிகழ்ந்தது பள்ளியிலதான். நாம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்த ஆசிரியர் என இருப்பார். பிடித்த ஆசிரியர் இல்லாதவை கணவரை நாம் இந்த இந்த உலகில் தேடி கண்டு பிடிப்பது மிகவும் அரிது.
Samayam Tamil Government School Teacher
அரசு பள்ளி ஆசிரியர்


ஏனென்றால், ஆசிரியர் என்பவர் நமக்கு தெய்வத்திற்கும் மேலானவர். அதனால் தான் இலக்கியங்களில் கூட "மாதா, பிதா, குரு, தெய்வம்" என தெய்வத்திற்கு முன்னாள் குருவை குறிப்பிட்டுள்ளனர். குருவை குறித்து நமக்கு தெரிந்த இன்னொரு பழமொழியும் உண்டு, "ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை நீ அர்ப்பணி!"...... நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நாம் பள்ளி பருவத்தில் தான் கற்றுக்கொள்கிறோம்.

கடந்த சில காலமாக நாம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம், "சாட்டை" படத்தில் வரும் சமுத்திரக்கனி-யை போல நிஜ வாழ்க்கையில் பல ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் வேறு பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்யப்படும் போது, மாணவர்கள் அவரை கண்ணீர்மல்க கட்டியணைத்து வழியனுப்பிவைக்கும் சம்பவங்கள் இப்போது நிறைய நிகழ்ந்து வருகிறது. ஏனென்றால், மலர் டீச்சர்... பவி டீச்சருக்கு அடுத்து தற்போது, பாசம் நிறைந்த ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
UG Admission 2022: கல்லூரி சேர்க்கைக்கு 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..!
ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்களுக்கு என்ன தேவை என்போதை கண்டறிந்து செய்வதில் சிறந்தவர்கள். நாம் கேள்விப்பட்டிருப்போம், தனது மாணவருக்கு ஒரு ஆசிரியர் ஷூ வாங்கி கொடுத்தார்.... சீருடை வாங்கி கொடுத்தார்.... மடிக்கணினி வாங்கிக்கொடுத்தார் என.... ஆனால், தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் தனது மாணவரின் மருத்துவ செலவுக்காக பணம் வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்து பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செல்வம் என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், தனது மாணவன் தினேஷ் என்பவர், லாரி சக்கரத்தில் மாட்டி விபத்துக்கு உள்ளதாகவும். அதை தான் நேரடியாக கண்டு தூக்கமில்லாமல் தவித்ததாகவும். அவரது குடும்பம் பொருளாதாரம் வாரியாக பின்தங்கியுள்ளதால், சிகிச்சைக்கு தவித்த மாணவனின் குடும்பத்திற்காக நிதி உதவி தேவை எனவும், சிகிச்சைக்காக சுமார் 10 லட்சம் வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


மேலும் அவர், ட்விட்டரைத் தவிர வேறெதிலும் இந்த பதிவை பகிரவில்லை. இதையடுத்து, செய்தி பகிரப்பட்ட சில நிமிடங்களில் 11 வயது மாணவனின் உயிரைக்காக்க மனிதநேயம் உள்ள மனிதர்கள் அடுத்தடுத்து பணம் செலுத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம் 7,68082 ரூபாய் மாணவனின் அம்மா வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. நேற்று முழு பணமும் கிடைத்ததை அடுத்து மாணவருக்கு தேவையான சிகிச்சை மருத்துவமனையில் சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் படிக்க நினைப்பவரா நீங்க?.. தமிழகத்தில் உள்ள 15 அரசு பொறியியல் கல்லூரி பட்டியல் இங்கே!
இதையடுத்து நேற்று மீண்டு தனது ட்விட்டர் பதிவில், மாணவரின் உடல்நலம் குறித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "மாணவன் தினேஷ்-க்கு நான்கு அறுவை சிகிச்சை முடிந்து உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.உங்களின் ஈகை உள்ளத்தால் மருத்துவ செலவிற்கான நாம் திரட்டிய தொகையில் 80 சதவீதம் வந்துவிட்டது.மீதமுள்ள தொகைக்கு வாய்ப்புள்ள அன்பு உள்ளங்கள் இயன்றதை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....


இவர் தற்போது மட்டும் இல்ல.... தனது மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுப்பது. தான் பணிபுரியும் பள்ளியை சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றியுள்ளது என பல நற்பணிகளை செய்து வருகிறார்.

அடுத்த செய்தி