ஆப்நகரம்

அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம்! - மீட்கும் முயற்சியில் ஜிவி பிரகாஷ்

மூடப்படும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குரல்கொடுத்துள்ளார்.

Samayam Tamil 10 Sep 2018, 11:37 am
Samayam Tamil GV-Prakash
மூடப்படும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குரல்கொடுத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை. அதை இலவசமாக கிடைக்க வேண்டும். ஏற்னவே கல்வி தமிழகத்தில் வியாபாரமாகி வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் 890 அரசு பள்ளிகள் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாக கூறி மூடப்படும் நிலையில் உள்ளன. நகரங்களில் அரசு பள்ளியின் நிலைமை கிராமத்தை விட மோசமாக உள்ளன. இப்போது இந்த பள்ளிகளை காப்பாற்றவிட்டால், இனி எப்போதும் முடியாது.

பல சாதனைப் படைத்தவர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்களாக தான் உள்ளனர். நான் சென்னையில் உள்ள ஒரு தொடக்க பள்ளியின் எல்கேஜி,யுகேஜி கற்றுத் தரும் ஆசிரியர்களின் சம்பளத்தை நான் ஏற்கிறேன். இதே போல் என் ரசிகர்களும், பொதுமக்களும் அரசு பள்ளியை மீட்டெடுக்க முன் வரவேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி