ஆப்நகரம்

New Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா

புதிய கல்விக் கொள்கை குறித்து தன்னுடைய பேச்சுக்கு எழுந்த எதிர்வினைக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அறிக்கை

Samayam Tamil 17 Jul 2019, 8:17 pm
புதிய கல்விக்கொள்கை தொடர்பான தான் பேசிய கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மையத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
Samayam Tamil கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை
கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை


சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர், சிவக்குமாரின் மகனுமான சூர்யா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய அவர், மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிப்பார்கள்.

இதற்கு அமைதியாக இருந்தால் இந்த கல்விக் கொள்கை நிச்சயம் திணிக்கப்படும். இதனால் புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்று சூரியா பேசினார்.

இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சூர்யாவின் கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை


அதில், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியினரின் கல்வி மேம்பாட்டிற்காக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி செய்து வருகிறனர். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவுக்கு உண்டு என்று கமல் தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கல்விக்கொள்கை குறித்த தன்னுடைய பேச்சுக்கும், அதற்காக எழுந்த எதிர்வினைக்கும் ஆதரவும் தெரிவித்த கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு நன்றி.

திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்வி பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என நடிகர் சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி