ஆப்நகரம்

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அட்சயபாத்திரா அமைப்பு!

அட்சயபத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பு சென்னையில் உள்ள மூன்று மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கி வருகிறது. இதனால் பல குழந்தைகள் சோர்வில்லாமல் பாடம் கற்றுக்கொள்வதாக தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Mar 2019, 1:51 pm
அட்சயபத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பு சென்னையில் உள்ள மூன்று மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கி வருகிறது. இதனால் பல குழந்தைகள் சோர்வில்லாமல் பாடம் கற்றுக்கொள்வதாக தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil food


அரசு பள்ளிகளில் படிக்கும் அதிகளவிளான மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமையாக இருக்கிறது. அதிகாலையிலேயே மாணவர்களின் தாய் மற்றும் தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவதால் அவர்களால் காலை உணவு சாப்பிட முடிவதில்லை. மேலும் பல மாணவர்கள் ஒரு வேலைகூட வயிறு நிறைய சாப்பிடவில்லை என்பதுதான் இதில் கசிப்பான உண்மை.

நாடுமுழுவதும் 14 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்கும் அட்சயபாத்திரம் என்ற அமைப்பு, தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயன்றபோது அனுமதி பெறுவதில் சிக்கில் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள மூன்று மாநகராட்சி பள்ளிகளில் காலையில் கிடைக்கும் பொங்கல், பூரி போன்ற சிற்றுண்டிக்காகவே குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வத்துடன் ஓடோடி வருவதாகவும், பாடங்களை தெம்பாக பயில்வதாகவும் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை மரியசாந்தி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் பெரும்சுமையை குறைத்திருப்பதாகக பெற்றோர் கூறுகின்றனர். மேலும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கிய ஆளுநர் அலுவலகத்திற்கும், இதை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய மாநகராட்சிக்கும் ஆட்சயபாத்திரம் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி