ஆப்நகரம்

அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைப்பெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கபட்டுள்ளனர்.

Samayam Tamil 13 Dec 2016, 10:36 pm
வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை(14-12-16) நடைப்பெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கபட்டுள்ளனர்.
Samayam Tamil anna university exam postponted
அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு


வர்தா புயலால் வட கடலோர மாவட்டங்களான சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். வர்தா புயலின் விளைவால் அங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் கீழே விழுந்து கிடங்கின்றனர். இதனால் இந்த மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து இன்னும் முறையாக சீர் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் மின் விநியோகமும், இணைய சேவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைப்பெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி