ஆப்நகரம்

Anna University: அண்ணா பல்கலை., தேர்வு முறைகேடு 10 பேர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 12:04 pm
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil anna-university


கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இத்தேர்வில் மறுகூட்டலில் மட்டும் சுமார் 73,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கூடுதலாக மதிப்பெண் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்த மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்ய பாடம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, உமா தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பேராசிரியையாக பணியாற்றி வரும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்களில் மண்டல ஒருங்கிணைப்பாளர்களான விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்கள் 7 பேரும் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி