ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன் ஹேக்கத்தான்!

பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில், அதிவிரைவு செயலியை உருவாக்க ஆன்லைன் ஹேக்கத்தான் திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Samayam Tamil 23 Apr 2020, 1:44 pm
பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில், அதிவிரைவு செயலியை உருவாக்க ஆன்லைன் ஹேக்கத்தான் திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Samayam Tamil Anna University Covid Hackathon


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தொழில்நுட்பங்கள கண்டுபிடிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்சியாளர், மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாக கல்லூரியின் முதல்வர் செந்தில் குமார் தலைமையில், தேசிய அளவில் ஆன்லைன் ஹேக்கத்தான் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read This:
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக ‘ஆரோக்கிய சேது’ என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் பயன்பாடு தான், தற்போது ஆன்லைன் ஹேக்கத்தானுக்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஹேக்கதானில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பப்பதிவு வரும் 27 ஆம் தேதி முதல் மே 6 ஆம் தேதி வரையில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள், www.covid19hackathon.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஹேக்கத்தானில் பங்கேற்பது எப்படி, விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை பார்க்கவும்.

அடுத்த செய்தி