ஆப்நகரம்

Gaja Cyclone Landfall: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்றைய தேர்வு ஒத்திவைப்பு

இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Nov 2018, 9:07 am
கஜா புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இன்றை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 01AnnaUniversityvg.
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று மாலை கடலூர், பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் டிசம்பர் மாதத்திற்கான பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் அட்டவணை படி இன்று தேர்வு நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது தொடர்பான முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடாமல் இருந்தது.

இன்றைய வானிலை சூழலை வைத்து தேர்வு நடத்தப்படுவது பற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அறை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதன்படி, இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்கலைக்கழக செயல்பாடுகளை மாணவர்கள் உடனக்குடன் தெரிந்துக்கொள்ள 'STUCOR’ என்ற செயலியை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. இதை அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதற்கான அறிவிப்பு 'STUCOR’ செயலியில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். அதனால் மாணவர்களுக்கு எளிதில் தகவல் சென்றடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருந்த தேர்வுகள், அடுத்து எப்போது? என்ன தேதியில்? நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி