ஆப்நகரம்

புதிய உலக சாதனை படைத்த அண்ணா பல்கலை.,யின் ட்ரோன்

உலக அளவில் வான்வெளி விளையாட்டுகளை மேற்பார்வையிடும் அமைப்பு ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் கூட்டமைப்பு. இந்த அமைப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆளில்லா ட்ரோனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

Samayam Tamil 1 Apr 2019, 11:59 am
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆளில்லா ட்ரோன் அதிக நேரம் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil 27drone


உலக அளவில் வான்வெளி விளையாட்டுகளை மேற்பார்வையிடும் அமைப்பு ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் கூட்டமைப்பு. இந்த அமைப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆளில்லா ட்ரோனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

ஜூலை 2018ல் ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஏரோ கிளப் ஆகிய அமைப்புகளின் அதிகாரிகள் முன்னிலையில் அண்ணா பல்கலை.,யின் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. 5 முதல் 25 கிலோ எடை பிரிவைச் சேர்ந்த இந்த ட்ரோன் 6 மணிநேரம் நிமிடங்கள் மற்றும் 45 விநாடிகள் பறந்தது.

அண்ணா பல்கலையில் உள்ள ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மையத்தில் இந்த ட்ரோன் தயாரிக்கப்பட்டது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தைத் தொடர்ந்து ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் இதனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. 5 முதல் 25 கிலோ பிரிவில் இது இதுவரை இல்லாத புதிய உலக சாதனை எனவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ட்ரோன் ஒலிம்பிக் உள்ளிட்ட மூன்று சர்வதேச பரிசுகளை இந்த ட்ரோன் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி