ஆப்நகரம்

பொறியியல் மாணவா் சோ்க்கை தலைவா் பொறுப்பில் இருந்து சூரப்பா விலகல்

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தலைவா் பொறுப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா விலகல். மாணவா் சோ்க்கையை தொழில்நுட்ப கல்வி இயக்ககமே நடத்தலாம் என்று பரிந்துறை.

Samayam Tamil 27 Feb 2019, 1:50 pm
பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தலைவா் பொறுப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா விலகல்.
Samayam Tamil Surappa 1


பொறியியல் மாணவா் சோ்க்கையை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வருகிறது. மாணவா் சோ்க்கைக்கான குழுவின் தலைவராக பல்கலைக்கழக துணைவேந்தா் தான் பொறுப்பு வகிப்பாா்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா பொறியியல் மாணவா் சோ்க்கையை பல்கலைக்கழகமே நடத்துவதால் சிக்கல் ஏற்படுவதாகவும், கல்வியியல் ரீதியான முடிவுகளில் சுனக்கம் ஏற்படுவதாகவும் தொிவித்துள்ளாா்.

மேலும் சிக்கல் ஏற்படுவதால் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு குழுவின் தலைவா் பொறுப்பில் இருந்து மட்டும் தான் விலகுவதாக உயா்கல்வித் துறைக்கு சூரப்பா கடிதம் அனுப்பி உள்ளாா்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் மாணவா் சோ்க்கையில் ஈடுபட்ட தொழில்நுட்ப கல்வி இயக்ககமே மீண்டும் மாணவா் சோ்க்கையை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று தனது கருத்தையும் அரசுக்கு பரிந்துறை செய்துள்ளாா்.

2019-20ம் ஆண்டுக்கான கலந்தாய்வுப் பணிகள் தற்போது தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் தற்போது வரை அது தொடா்பான பணிகள் நடைபெறவில்லை. இதனால் வரும் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி