ஆப்நகரம்

இந்திய-அமெரிக்க அரசியலமைப்பு குறித்து விவாதப்போட்டி: பெங்களூரு மாணவி வெற்றி!

சென்னையில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதப் போட்டியில், பெங்களூரு சட்டப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி வெற்றி பெற்றார்.

Samayam Tamil 16 Sep 2019, 1:33 pm
இந்திய-அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதப்போட்டியில் பெங்களூரு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உன்னாட்டி ஆசிஷ் கியா என்ற மாணவி வெற்றி பெற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதபதி இந்திரா பானர்ஜி, அமெரிக்க துணைத்தூதர் ராபர்ட் பர்ஜஸ் ஆகியோர் பரிசு வழங்கினர்.
Samayam Tamil US Consulate


சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகமும், லயோலா கல்லூரியும் இணைந்து செப்டம்பர் 14ம் தேதி ‘இந்திய-அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம்’ குறித்த விவாதப் போட்டி நடத்தியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த இறுதி போட்டியில் பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி உன்னாட்டி ஆசிஷ் கியா வெற்றி பெற்றார்.

இறுதி போட்டி பரிசளிப்பு விழாவில் அமெரிக்க துணைத்தூதர் ராபர்ட் பர்ஜஸ், உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, மூத்த வழக்கறிஞர் அபிநவ் சந்திரசூட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது ராபர்ட் பர்ஜஸ் பேசியதாவது; ‘இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் பழமையான ஜனநாயக நாடுகளாகத் திகழ்கின்றன.
இந்த சூழலில் தென்னிந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இரு நாட்டு அரசியலமைப்பு ஒப்பீடு பற்றி மாணவர்களிடத்தில் விவாதப் போட்டி நடத்துவதில் அமெரிக்க துணைத்தூதரகம் பெருமை கொள்கிறது. இதில் பங்கேற்ற மாணவர்கள் பேசிய விஷயங்கள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த புதிய தலைமுறை மாணவர்களே இந்தியாவின் எதிர்காலம்’ இவ்வாறு அமெரிக்க துணைத்தூதர் ராபர்ட் பர்ஜஸ் தெரிவித்தார்.

(அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை!)

உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசுகையில், ‘இந்தியா அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையேயான அரசியலமைப்புச் சட்டம் ஒப்பீடு குறித்து நடத்தப்பட்ட விவாதப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பார்க்கும் போது, இம்மாணவர்கள் அனைவரும் சட்டமேதை, நீதிபதி, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பிற்கு வரத் தகுதியானவர்களாக உள்ளனர். அமெரிக்காவின் அரசியலைப்புச் சட்டம் இந்தியாவை விட பழைமையானது. அதில் 27 முறை திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
உலக திறனறியும் போட்டியில் இந்திய மாணவர் தங்கம் வென்று சாதனை
இவ்வாறு இரண்டு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஒப்பீட்டு பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. அவை எப்படி அமல்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்போதைய சூழலில், நீதிமன்றத்தின் முடிவுகளை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது. நீதிமன்ற உத்தரவு அமல்படுத்துவதற்கு அரசு அதிகார வர்க்கத்தையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது’ இவ்வாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

அடுத்த செய்தி