ஆப்நகரம்

கொரோனா பரவுதலை தவிர்க்க சேஃப் கீ கண்டுபிடித்து அசத்திய பென்னட் பல்கலைக்கழக மாணவர்!

தும்மல், இருமல் மூலம் மட்டுமின்றி, ஒருவரை ஒருவர் தொடுவதனால் கூட கொரோனா தொற்று அதிகம் பரவுகிறது. இவ்வகையிலான கொரோனா பரவுதலை தடுக்க பென்னட் பல்கலைக்கழக மாணவர் சேஃப் கீ கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

Samayam Tamil 27 Jul 2020, 8:53 pm
பென்னட் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொவிட்-19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த கருவி அமேசானில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
Samayam Tamil Covid C-Safekey


இந்த சி- சேஃப்கீ (C-Safekey) என்ற கருவி, பென்னட் பல்கலைகழக மாணவர் ஜைத் நயீமினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

சி-சேஃப்கீ மூலம் கதவை நாம் தொடாமல் திறக்க முடியும். அத்துடன், கைப்பிடியைத் திருப்புவது, ஒரு லிஃப்ட் அல்லது ஏ.டி.எம்'மில் பொத்தான்களை அழுத்துவது போன்றவற்றில் நம் கைகள் தொடாமலேயே இதை வைத்து பயன்படுத்தி வேலையை முடிக்கலாம்.

பென்னட் பல்கலைகழகமும், இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்கிறது. ஜைத் நயீமி, பென்னட் பல்கலைகழக பேராசியர்கள் மூலம் ஆலோசனை பெற்று இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.

பென்னட் பல்கலைகழகம் இது குறித்து கூறுகையில் “ஆர்வத்துடன் செயல்படும் இதுபோன்ற மாணவர்களை நாங்கள் நிச்சயம் வரவேற்போம். அதேபோல் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுக்கான மையத்தையும் மேம்படுத்தி வருகிறோம். ஜைத் ஒரு வணிக குடும்ப பிண்ணணி கொண்ட மாணவர். அத்தகைய சூழலில், கொவிட்-19னால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கூட வாய்ப்பாக மாற்ற முடியும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார் என்று பல்கலைகழக மேலாளர் திரு. மனீஷ் மாத்தூர் கூறினார்.

இது குறித்து ஜைத் கூறுகையில், “இதில் வெற்றி தோல்வி குறித்து யோசிக்கவில்லை. என்னுடைய சிந்தனையில் பிடிப்புடன் இருந்தேன். இதற்கு நான் மேலாளர் மனீஷ் மாத்தூர் மற்றும் டாக்டர் வினோத் சாக்ஷ்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

இந்த சி-சேஃப்கீ ஆண்டிமைக்ரோபையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் காப்பர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கதவுகள், லிப்ட், ஏடியம் போன்ற கொரோனா எளிதில் பரவுவதை தவிர்க்க இயலும். குறிப்பாக இந்த கருவி அனைத்து விதமான தொடுதிரைகளிலும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. இந்த கருவியை உங்களது சாவி கொத்துகளில், சிறிய பைகளிலும் எடுத்து செல்லலாம்.

ஜைத் நாடுமுழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட உடன் இந்த கருவி தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளார்.



நீங்கள் வெளியில் செல்லுகையில், கொரோனா பாதுகாப்பு குறைபாடுகளை தவிர்க்க இந்த சி-சேஃப்கீ நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த சி-சேஃப்கீ நிச்சயம் கொவிட்-19க்கு பின் முக்கிய பரிசாகவும் அமையும்.

2016ஆம் ஆண்டில் டைம்ஸ் குழுமத்தால் பென்னட் பல்கலைகழகத்தில் வணிக பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இதன் மூலம் தேசிய அளவிலான போட்டிகள், உளவியல் தொடர்பான முகாங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மிக குறுகிய காலத்திலேயே இரண்டு மாணவர்கள் 3 மில்லியன் டாலர்கள் திரட்டி தொழிமுனைவோராக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி