ஆப்நகரம்

கோவை பாரதியார் பல்கலை., பதிவாளராக முருகன் நியமனம்!

2018ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்தபோது பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக முருகன் மீதும் புகார் கூறப்படுகிறது. அரசு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை மற்றொரு அரசு பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிப்பது அசாதாரணமானது எனவும் கூறுப்படுகிறது.

TIMESOFINDIA.COM 12 Mar 2019, 3:38 am
பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக இருந்த பி.வனிதாவுக்குப் பதிலாக முருகன் என்பவர் புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil bharathiar-university


பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராகப் பணிபுரிந்த செந்தில்வாசன் மீது எழுந்த மோசடி புகார்கள் வந்தன. இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, பேராசிரியர் மோகன் நியமிக்கப்பட்டார். சில மாதங்களில் மோகன், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், பொறுப்பு பதிவாளராக பி.வனிதா நியமிக்கப்பட்டார்.

வனிதா சொந்த காராணங்களுக்கான பொறுப்பு பதிவாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை தலைவராகவும் உள்ள முருகன் புதிய பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முருகன் தேர்தலுக்குப் பின்பே பதிவாளராகப் பொறுப்பேற்பார் என பல்கலைக்கழக வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

2018ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்தபோது பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக முருகன் மீதும் புகார் கூறப்படுகிறது. அரசு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை மற்றொரு அரசு பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிப்பது அசாதாரணமானது எனவும் கூறுப்படுகிறது.

அடுத்த செய்தி