ஆப்நகரம்

பாரதியார் பல்கலை., பதிவாளர் திடீர் ராஜினாமா

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்ற்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில் அப்பல்கலைகழக பதிவாளர் (பொறுப்பு) தனது பதவியை தீடீரென ராஜினாமா செய்துள்ளார்.

TNN 29 Nov 2016, 6:08 pm
கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்ற்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில் அப்பல்கலைகழக பதிவாளர் (பொறுப்பு) தனது பதவியை தீடீரென ராஜினாமா செய்துள்ளார்.
Samayam Tamil bharathyiar university registrar resignation
பாரதியார் பல்கலை., பதிவாளர் திடீர் ராஜினாமா


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த செந்தில் குமார் பல்வேறு முறைக்கேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து பொறுப்பு பதிவாளராக பேராசிரியர் மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில் பதிவாளர் மோகன் தனது பணியை ராஜினாமா செய்வதாற்கான கடித்தை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியிடம் கொடுத்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்,இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த சூழலில் அப்பல்கலைகழக பதிவாளர் (பொறுப்பு)மோகன் தனது பதவியை தீடீரென ராஜினாமா செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மேலும் இவர் வேதியியல் துறை தலைவராக பணியில் தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி