ஆப்நகரம்

பிள்ளையுடன் சேர்ந்து +2 பரிச்சை எழுதிய பெற்றோர் : படிச்சா இப்படி படிக்கனும்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 18வயது பிப்லாப் என்ற மாணவன், தன் பெற்றோரு பலராம் மற்றும் கல்யாணியுடன் சேர்ந்து +2 தேர்வு எழுதியுள்ளார்.

TNN 1 Jun 2017, 6:01 pm
நாடியா : மேற்கு வங்கத்தை சேர்ந்த 18வயது பிப்லாப் என்ற மாணவன், தன் பெற்றோரு பலராம் மற்றும் கல்யாணியுடன் சேர்ந்து +2 தேர்வு எழுதியுள்ளார்.
Samayam Tamil boy mother father appear for class 12 exams together
பிள்ளையுடன் சேர்ந்து +2 பரிச்சை எழுதிய பெற்றோர் : படிச்சா இப்படி படிக்கனும்


பிச்சை புகினும் கற்கை நன்றே என ஒளவையார் தெய்வ வாக்கு தந்துள்ளார். இருப்பினும் பலர் செல்வம் வைத்திருந்தாலும் படிப்பதில் ஆர்வம் காட்டுவது குறைவு தான்.

குடும்பத்துடன் படிப்பு:

மேற்கு வங்கம், நாடியா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிப்லாப். 18 வயதான பிப்லாப் +2 படித்து வந்தார். அவர் படித்ததோடு மட்டும் இல்லாமல் தன் பெற்றோர்களான பலராம் மற்றும் கல்யாணி ஆகியோரையும் தன் உடன் தன் வகுப்பில் அமர்த்தி படிக்க செய்துள்ளார்.

பிப்லாப் மற்றும் பலராம் ஆகியோர் விவசாயம் செய்தனர். அதோடு பள்ளிக்கு சென்று வந்த பின்னர் டியூசன் எடுத்து வருகின்றார். பெற்றோருக்கு படிப்பு சொல்லிக்கொடுத்து முடித்த பின்னர், அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தாண்டு நடந்த +2 தேர்வை பிப்லாம் மற்றும் அவரது பெற்றோர் எழுதினர்.



இந்நிலையில் தற்போது +2 தேர்வு முடிவு வெளியானது. அதில் பிப்லாம் மற்றும் அவரது தாய் கல்யாணி முறையே 45.6% மற்றும் 50.6% மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவரது தந்தை பலராம் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளார்.

அடுத்த தேர்வில் அதிக நேரம் படித்து வெற்றிபெறுவேன் என பலராம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி