ஆப்நகரம்

அரசுக்கு பள்ளிகளுக்கு 25 கம்ப்யூட்டர்களை வாங்கி கொடுக்குமாறு தனியார் பள்ளிக்கு அபராதம்!

பெங்களூருவில் அரசு பள்ளிகளுக்கு 25 கம்ப்யூட்டர்களை வழங்குமாறு தனியார் பள்ளி ஒன்றுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணயைம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 May 2018, 3:11 pm
பெங்களூருவில் அரசு பள்ளிகளுக்கு 25 கம்ப்யூட்டர்களை வழங்குமாறு தனியார் பள்ளி ஒன்றுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணயைம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil school computer


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தஃபோபில்ஸ் எனும் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவரின் பெற்றோர் இரண்டு பேர், பள்ளியை குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளனர். அதில், படிக்காத மாணவர்களை உச்சி வெயிலில் நிற்க வைப்பது, குறிப்பிட்ட பிராண்ட் ஷூக்களை மட்டும் அணிந்த வர கட்டாயப்படுத்தவது, ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருப்பது, அதிக கட்டணம் வசூலிப்பது, என பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக 13 விதமான புகார்கள் அளித்தனர்.

இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தனியார் பள்ளியின் மீது தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி, எந்தெந்த அரசு பள்ளிகளில் கணினி போன்ற வசதிகள் இல்லை என்று அடையாளம் காணுமாறு கல்வித்துறையிடம் கேட்டது. பின்னர், அதில் ஐந்து அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் 5 கம்ப்யூட்டர்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட தனியார் பள்ளிக்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி