ஆப்நகரம்

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகலாம்

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை அல்லது நாளை மதியம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 26 May 2017, 1:44 pm
டெல்லி : சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை அல்லது நாளை மதியம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil cbse 12 th result may come tommorrow
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகலாம்


சி.பி.எஸ்.இ 12-வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைப்பெற்றது. இந்த தேர்வில் இந்தியா ழுழுவதிலும் ஏறக்குறைய 11 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதியே வெளியிடப்பட்டது. தமிழக பாடவழியில் படித்த மாணவர்களுக்கான முடிவு மே முதல் வாரத்திலேயே வெளியிடபட்டது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் கடினமான அல்லது தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறைக்கு ஏதிர்ப்பு தெரிவித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தால் தான் தேர்வு முடிவு வெளிவாவதில் தாமதம் என கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கிற்கு செவ்வாய் கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. டெல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் , " கடினமான அல்லது தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லி நீதிமன்ற தீர்ப்புக்கு ஏதிராக சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. இதனால் தேர்வு மூடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் மேல்முறையீடு செய்யும் முடிவில் இருந்து சிபிஎஸ்இ பின்வாங்கியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

இதனால் கருணை மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

cbse 12-th result may declare tommorrow

அடுத்த செய்தி