ஆப்நகரம்

நீட் தோ்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தோ்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து சி.பி.எஸ்.இ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 Mar 2018, 5:44 pm
நீட் தோ்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து சி.பி.எஸ்.இ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil cbse extends neet 2018 registration to march 12
நீட் தோ்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு


மருத்துவ படிப்புகளுக்குான நீட் நுழைவுத் தோ்வு வருகின்ற மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நீட் தோ்வு வினாத்தாள் ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் அமைக்கப்படும் என்றும் அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தொிவித்திருந்தாா்.

மேலும் அந்தந்த மாநில பாடதிட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வினாத்தாள்கள் கேட்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. தொிவித்திருந்தது. இதனிடையே நீட் தோ்வுக்கு நாளை (9ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து சி.பி.எஸ்.இ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூடுதலாக 3 தினங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாா்ச் 12ம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. தொிவித்துள்ளது.

நேற்று வழக்கு ஒன்றில் தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நீட் உட்பட எந்த தோ்வுக்கும் இந்த ஆண்டு ஆதாா் அட்டை கட்டாயம் இல்லை என்று உத்தரவிட்டைதைத் தொடா்ந்து தோ்வா்கள் ஆதாா் அட்டையை எடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி