ஆப்நகரம்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் புதிய முறை: சிபிஎஸ்இ முடிவு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க புதிய முறையை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்த உள்ளது.

Samayam Tamil 20 Mar 2019, 3:41 pm
10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க புதிய முறையை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்த உள்ளது.
Samayam Tamil cbse certificate


ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களுக்கு சான்றிதழ் தனியாகவும், மதிப்பெண் பட்டியல் தனியாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் மேற்படிப்புகளில் சேரும்போது குழப்பங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த குழப்பதை தவிர்க்க, தற்போது சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் இடம்பெறும் வகையில், புதிய முறையை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த முறை இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி